×

கொந்தகை அருகே சுடுமண் பானை கலயங்கள் கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வுத் தளம் அருகே சுரேஷ் என்பவரது தென்னந்தோப்பு உள்ளது. இதில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டிய போது 5 அடி ஆழத்தில் மண்பாண்ட பொருட்கள் மற்றும் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. தாழிகளில் உள்ள பொருட்கள் போன்று சிறியதும், பெரியதுமாக கருப்பு, சிவப்பு வண்ணங்களில் 13 பொருட்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து விவசாயி சுரேஷ் கூறுகையில், ‘‘தோட்டத்தில் கிடைத்த பொருட்கள் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

The post கொந்தகை அருகே சுடுமண் பானை கலயங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Turpuvanam ,Sivagangai District ,Turapuvanam, South Nanthopu ,Suresh ,turnagai ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்